3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் |
தமிழில் ‛சொர்ணமுகி, தூண்டில், பிரியசகி' ஆகிய படங்களை இயக்கியவர் கே.எஸ்.அதியமான். இவர் ஹிந்தியிலும் ஒரு சில படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக இவரது இயக்கத்தில் 2010ம் ஆண்டில் ஹிந்தியில் தும்சே மில்கர் என்ற படம் வெளியானது.
இதற்கிடையே உதயநிதி, பாயல் ராஜ்புட், ஆனந்தி நடிக்க ‛ஏஞ்சல்' என்ற படத்தை இவர் இயக்கினார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் உதயநிதி அரசியலில் பயணிக்க தொடங்கியதால் படம் பாதியில் நின்று போனது. இதுதொடர்பாக உதயநிதி தங்களது படத்தில் நடித்து கொடுக்கவில்லை என சர்ச்சைகள் எழுந்தன. கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது.
இந்நிலையில் மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார் அதியமான். இதில் நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க விதார்த் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.