மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

'அங்காடி தெரு, மாஞ்சா வேலு, கல்லூரி காலங்கள், தெய்வத்திருமகள், வேலாயுதம், சாட்டை, ஜில்லா' உள்பட பல படங்களில் நடித்தவர் பிளாக் பாண்டி. சின்னத்திரையிலும் 'கோலங்கள், கனா காணும் காலங்கள்' என பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் 'உதவும் மனிதம்' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார் பிளாக் பாண்டி. இதன்மூலம் இதுவரை 75 பேருக்கு மேல் தான் படிக்க வைத்திருப்பதாக கூறும் அவர், 'தற்போது கூட நான்கு இலங்கை மாணவிகளை கல்லூரியில் படிக்க வைத்துள்ளேன். நான் பத்தாவது மட்டுமே படித்துள்ளேன். அந்த பத்தாம் வகுப்பிலும் பெயில் ஆகிவிட்டேன். அதன் காரணமாக என்னுடைய தங்கையை பட்டப்படிப்பு படிக்க வைத்த நான், இப்போது இந்த அறக்கட்டளை மூலம் பல ஏழை எளிய மாணவ மாணவிகளை படிக்க வைத்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து வருகிறேன்' என்கிறார் பிளாக் பாண்டி.