மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்த மீசைய முறுக்கு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. கோவை மாவட்டத்தை சேர்ந்தவரான இவர், அதன் பிறகு கோடியில் ஒருவன், காட்டேரி, திருவின் குரல் போன்ற படங்களில் நடித்தார். தற்போது மிஸ் மேகி உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலுக்கு அருகே ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார் ஆத்மிகா. அதுகுறித்து அவர் கூறுகையில், ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பது வறுமையில் வாழும் உயிர்களுக்கு உதவுவது தான் ஆன்மிகத்தின் உச்சமாகும். சிறுவயதில் இருந்தே ஆன்மிகத்திலும் சமூக சேவையிலும் எனக்கு ஈடுபாடு அதிகமாக இருந்து வருகிறது. அதனால் கூடிய சீக்கிரமே சமூக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யப் போகிறேன் என்கிறார் ஆத்மிகா.