சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நடித்த மீசைய முறுக்கு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. கோவை மாவட்டத்தை சேர்ந்தவரான இவர், அதன் பிறகு கோடியில் ஒருவன், காட்டேரி, திருவின் குரல் போன்ற படங்களில் நடித்தார். தற்போது மிஸ் மேகி உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோயிலுக்கு அருகே ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கியுள்ளார் ஆத்மிகா. அதுகுறித்து அவர் கூறுகையில், ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பது வறுமையில் வாழும் உயிர்களுக்கு உதவுவது தான் ஆன்மிகத்தின் உச்சமாகும். சிறுவயதில் இருந்தே ஆன்மிகத்திலும் சமூக சேவையிலும் எனக்கு ஈடுபாடு அதிகமாக இருந்து வருகிறது. அதனால் கூடிய சீக்கிரமே சமூக தொண்டு நிறுவனம் ஒன்றை தொடங்கி ஏராளமான ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யப் போகிறேன் என்கிறார் ஆத்மிகா.




