மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மு .மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா இணைந்து நடித்துள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படம் கண்ணை நம்பாதே. இப்படத்தில் ஆத்மிகா, பூமிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கடந்த 17ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியான ஆத்மிகா, கண்ணை நம்பாதே படத்தை 90 வயதை கடந்த தனது தாத்தாவுடன் பார்த்து மகிழ்ந்திருக்கிறார். அதோடு தனது பேத்தி நடித்த படத்தை பார்ப்பதற்கு தியேட்டர் படிக்கட்டுகளில் அவர் ஆர்வமுடன் ஏறி வந்திருக்கிறார்.
இது குறித்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள ஆத்மிகா, ‛‛90க்கும் அதிகமான வயது கொண்ட எனது தாத்தா, அவரது பேத்தி படத்தை பார்க்க சிரமமின்றி படிக்கட்டுகளில் ஏறினார். விலைமதிப்பற்ற இந்த தருணங்கள் என்றென்றும் எனக்கு பொக்கிஷமாக இருக்கும் என்று பதிவிட்டு இருக்கிறார் ஆத்மிகா .