காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மு .மாறன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா இணைந்து நடித்துள்ள சஸ்பென்ஸ் திரில்லர் படம் கண்ணை நம்பாதே. இப்படத்தில் ஆத்மிகா, பூமிகா, பிரசன்னா, ஸ்ரீகாந்த் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கடந்த 17ஆம் தேதி திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியான ஆத்மிகா, கண்ணை நம்பாதே படத்தை 90 வயதை கடந்த தனது தாத்தாவுடன் பார்த்து மகிழ்ந்திருக்கிறார். அதோடு தனது பேத்தி நடித்த படத்தை பார்ப்பதற்கு தியேட்டர் படிக்கட்டுகளில் அவர் ஆர்வமுடன் ஏறி வந்திருக்கிறார்.
இது குறித்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள ஆத்மிகா, ‛‛90க்கும் அதிகமான வயது கொண்ட எனது தாத்தா, அவரது பேத்தி படத்தை பார்க்க சிரமமின்றி படிக்கட்டுகளில் ஏறினார். விலைமதிப்பற்ற இந்த தருணங்கள் என்றென்றும் எனக்கு பொக்கிஷமாக இருக்கும் என்று பதிவிட்டு இருக்கிறார் ஆத்மிகா .