மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
டிஜிட்டலில் திரைப்படங்களைத் தியேட்டர்களில் திரையிட வி.பி.எப் என்ற கட்டணத்தைத் தயாரிப்பாளர்கள் செலுத்த வேண்டும். அப்படி கட்டணம் செலுத்தினால் மட்டுமே அந்தப் படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படும். சில தனியார் நிறுவனங்கள் அந்த விபிஎப் கட்டணத்தை அதிகமாக வாங்குவதால் சொந்தமாகவே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தது மலையாள தயாரிப்பாளர் சங்கம்.
அதன்படி அவர்களது 'பிடிசி' என்ற நிறுவனம் மூலம் தியேட்டர்களுக்குத் தேவையான 'கன்டென்ட்'களை வாங்கிக் கொள்ள அறிவுறுத்தியது. ஆனால், இந்த புதிய முறைக்கு பிரபல மல்டிபிளக்ஸ் நிறுவனமான பிவிஆர் ஐநாக்ஸ் நிறுவனம் சம்மதிக்கவில்லை. கியூப், யுஎப்ஓ ஆகிய நிறுவனங்களுடன் தாங்கள் ஏற்கெனவே போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி மட்டுமே செயல்படுவோம் என்றது.
அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன் அவர்களது தியேட்டர்களில் மலையாளப் படங்களைத் திரையிடுவதையும் நிறுத்தியது. இந்த விவகாரம் விஸ்வரூபமாக உருவெடுத்தது. எதிர்காலத்தில் பிவிஆர் நிறுவனத்திற்கு மலையாளப் படங்களைத் தர மாட்டோம் என மலையாளத் திரையுலகக் கூட்டமைப்பு அறிவித்தது.
இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிவிஆர் நிறுவனம் மலையாளப் படங்களை தொடர்ந்து திரையிட சம்மதம் தெரிவித்தது. புதிதாக திறக்கப்படும் தியேட்டர்களில் மலையாள தயாரிப்பாளர் சங்கத்தின் 'பிடிசி' மூலம் 'கன்டென்ட்'களை வாங்கிக் கொள்ளவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு பிவிஆர் தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட மலையாளப் படக் காட்சிகள் இன்று முதல் நடைபெற உள்ளது.