நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் தயாராகி கேரளாவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. இந்தப்படத்தை சிதம்பரம் என்பவர் இயக்கியிருந்தார். படத்தில் பத்து நண்பர்களில் ஒருவராக நடித்திருந்த சவ்பின் சாஹிர் என்பவர் தான், தனது பறவ பிலிம்ஸ் மூலமாக பாபு ஷாஹிர் மற்றும் ஷான் ஆண்டனி ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தார். 20 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் மலையாள சினிமாவில் முதன்முறையாக 200 கோடி வசூலைத் தொட்ட படம் என்கிற பெருமையையும் பெற்றது.
இந்த நிலையில் சிராஜ் வலையதாரா என்பவர் இந்த படத்தின் தயாரிப்புக்காக தான் ஒன்பது கோடி ரூபாய் கொடுத்ததாகவும், படம் வெளியான பின் லாபத்தில் தனக்கு நாற்பது சதவீதம் பங்கு தருவதாக கூறப்பட்டதாகவும் ஆனால் இப்போது தயாரிப்பாளர்கள் அதை தர மறுத்து பின்வாங்குவதாகவும் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இது குறித்து விளக்கம் கேட்டு படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதுடன், அதுவரை அவர்களின் வங்கிக் கணக்கை முடக்கி வைக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு மலையாள திரையுலகில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.