தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஜய் ஆண்டனியின் சகோதரி மகன் நடிகர் அஜய் நடிக்கும் புதிய படம் ‛பூக்கி'. இதை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். சென்னையில் நடந்த பூக்கி பட பூஜையில் சம்பந்தம் இல்லாமல் அரசியல் பேசியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். அதில் அவர் பேசியதாவது, ''சமீபத்தில் ஒரு மாநாட்டை டிவியில் பார்த்தேன். நம் இளைஞர்கள் இன்னும் அரசியல் படுத்தப்படாமல் இருக்கிறார்களோ என தோன்கிறது. காரணம், காலை முதல் அந்த மாநாட்டில் வெயிலில் கருகி போகிறார்கள். மேடையில் இருந்து துாக்கி வீசப்படுகிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் அவர்களை நாம் சரியாக வழி நடத்தவில்லை. அவர்களை கவர தவறிவிட்டோம். அவர்களின் குரலை பேச தவறிவிட்டோம்.
குறிப்பாக, சினிமாவில் அந்த இளைஞர்களின் குரல், அவங்க மனசு பதிவாகவில்லையோ என்று தோன்றுகிறது. அவர்களுக்கு விருப்பமான படங்கள் வராமல், பான் இந்தியா படங்களாக நாம் எடுக்கிறோம் என்பதை அந்த கூட்டத்தை பார்த்தபோது எனக்கு தோன்றியது. அவர்கள் குரல் பேசப்பட வேண்டும். அவர்கள் உலகம் என்ன என்பது நாம் காண்பிக்கவில்லை. மலையாளம், கன்னட சினிமாவில் இளைஞர்களின் மனசு, உலகம், அவர்கள் மொழி, அவர்கள் காதலை பதிவு செய்கிறார்கள். தமிழில் அந்த நிலை இல்லை. இப்போது பூக்கி காதல் படமாக வருவது மகிழ்ச்சி'' என்று முடித்தார்.
இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்க்கும், வசந்தபாலனுக்கும் சண்டை சச்சரவு இல்லை. எந்த அரசியல் கட்சியிலும் வசந்தபாலன் இல்லை. ஆனாலும், அரசியல் மாநாடு குறித்து, விஜய் பெயரை குறிப்பிடாமல் அவர் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார். தவிர, வசந்தபாலன் சொன்ன கருத்திலும் உண்மை இருக்கிறது.
நாம் ஹீரோயிச, ஆக் ஷன், பேய், காமெடி படங்களை எடுக்கிறோம். நல்ல காதல் படங்களை, யூத் படங்களை எடுப்பது இல்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் யூத் ஹீரோக்களே குறைவு என்கிறார்கள் அந்த பேச்சை உன்னிப்பாக கவனித்தவர்கள்.