வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் |

2025ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது போட்டியில் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான பிரிவில் கலந்து கொள்ள ஹிந்தித் திரைப்படமான 'லாபட்டா லேடீஸ்' படம் தேர்வு செய்து அனுப்பப்படுகிறது.
“கொட்டுக்காளி, மகாராஜா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தங்கலான், ஜமா, வாழை' உள்ளிட்ட தமிழ்ப் படங்கள், 'ஆட்டம், உள்ளொழுக்கு, ஆடு ஜீவிதம், ஆல் வி இமேஜின் அஸ் லைட்' ஆகிய மலையாளப் படங்கள், 'ஹனுமான், கல்கி 2898 எடி, மங்களவாரம்” ஆகிய தமிழ்ப் படங்கள் உள்ளிட்ட மொத்தம் 29 படங்கள் ஆஸ்கர் தேர்வுக்காக விண்ணப்பித்த படங்களாக இருந்தன.
இந்தப் போட்டியில் 12 ஹிந்திப் படங்களும் போட்டியிட்டன. மேலும், 2 மராத்தி படங்கள், ஒரு ஒரியப் படம் ஆகியவையும் போட்டியில் இடம் பெற்றன. இவற்றிலிருந்து ஹிந்திப் படமான 'லாபட்டா லேடீஸ்' படத்தை இந்தியா சார்பாகத் தேர்வு செய்து அனுப்புகிறது பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா.
வழக்கம் போலவே இந்தத் தேர்வுக்கு சில ஆதரவுக் குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ள. தமிழில், 'வெயில், அங்காடித் தெரு, அரவான்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த பாலன் இது குறித்து, “லாபட்டா லேடீஸ்' இந்தி திரைப்படம் பொழுதுபோக்கு தன்மைக்காகவும் சுவாரஸ்யத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு பீல் குட் டிராமா திரைப்படம். ஆனால் அதை விட கொட்டுக்காளியோ, உள்ளொழுக்கோ, ஆடு ஜீவிதமோ இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்,” என பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.




