காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் என்ற கேரக்டரில் நடித்து, சின்னத்திரையில் பிரபலமானவர் குமரன். இவர் குமார சம்பவம் படத்தின் மூலம் ஹீரோவாகி உள்ளார். பாலாஜி வேணு கோபால் இயக்கிய இந்த படம் செப்டம்பர் 12ல் ரிலீஸாகிறது. தான் ஹீரோவானது குறித்து பேசியுள்ள குமரன், ''சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என்பது என் கனவு. இப்போது ஆகிவிட்டேன். நான் எமோஷனலாக இருக்கிறேன். இது என்னுடையை 17 ஆண்டு கனவு. இந்த கனவை நனவாக்கி அனைவருக்கும் நன்றி.
எங்க குடும்பத்துல யாரும் சினிமா பேக்கிரவுண்ட் கிடையாது. அப்பா டீக்கடையில வேலை பார்த்தவரு. ஆனா, அவருக்கு நான் சினிமாவில் ஹீரோ ஆகணும்னு ஆசை இருந்தது. அவர் கனவையும் நனவாக்கி இருக்கிறேன். ஆரம்பத்துல எப்படி சினிமாவுக்கு போகணும்னு தெரியலை. எங்கயோ சுற்றி பாண்டியன் ஸ்டார்ஸ் சீரியலில் நடித்தேன். ஓரளவு பிரபலம் ஆனேன். இந்த படத்தோட பேரு குமார சம்பவம்.
இது, என் வாழ்க்கையில் முக்கியமான சம்பவமும் கூட. பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்புக்கு போகும்போது சினிமாவுக்கும் இப்படி போகணும்னு நினைச்சிட்டு இருந்தேன், அது நடந்து இருக்கிறது. இந்த பட இயக்குனர் பாலாஜி வேணுகோபால் யுடியூப் நடத்திக் கொண்டு இருந்தபோது, அதுல நடிச்சு இருக்கிறேன். இந்த படத்தை குடும்பத்தோட பார்க்கலாம். முகம் சுளிக்கும் காட்சிகள் இருக்காது'' என்றார்.