நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
சமீபகாலமாக தென்னிந்திய அளவில் பரபரப்பாக பேசப்படும் அளவிற்கு முன்னேறி வருகிறார் நடிகை ருக்மணி வசந்த். சில மாதங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி வழியாக ஏஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராஸி படத்தில் நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இது தவிர கன்னடத்தில் யஷ் ஜோடியாக டாக்ஸிக், ரிஷப் ஷெட்டி ஜோடியாக காந்தாரா ' சாப்டர் 1' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் தெலுங்கில் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் டிராகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் படத்திலும் ருக்மணி வசந்த் தான் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் கடந்த சில நாட்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்ற மதராஸி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அந்த படத்தின் தயாரிப்பாளர் என்.வி.பிரசாத் பேசும்போது, ருக்மணி வசந்த் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்கிற ரகசியத்தை வெளிப்படையாகவே கூறிவிட்டார். அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீ லீலா போல வரும் நாட்களில் ரசிகர்களை ருக்மணி வசந்த் ஜுரம் பிடித்துக்கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை.