குட் பேட் அக்லி ஓடிடி வெளியாகும் தேதி | வெளிவரும் முன்பே வெற்றிக்கு வழிவகுத்த "கேங்கர்ஸ்" | திரைப்பட விழாவில் 'சந்தோஷ்': மத்திய அரசு அனுமதிக்குமா? | சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி ஹீரோக்களில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இருவருமே இருக்கிறார்கள். அவர்களை நாயகர்களாக நடிக்க வைத்து 'ஆர்ஆர்ஆர்' படத்தை இயக்கி அவர்களை பான்--இந்தியா நடிகர்களாகவும் மாற்றிவிட்டார் ராஜமவுலி.
பட வெளியீட்டிற்கு முன்பாக பிரமோஷனுக்காக பெரும்பாலான ஊர்களுக்கு ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் சென்றனர். படம் வெளியாகி ஒரு வாரம் ஆனவுடன் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் தனித்தனியே தங்களை பிரமோஷன் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தங்களுக்குக் கிடைத்த பிரபலத்தை அடுத்தடுத்த படங்களின் பயன்படுத்திக் கொள்ளவே இந்த ஏற்பாடு. மும்பையில் உள்ள பிரபல செலிபிரிட்டி மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் இணைந்து சில நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்களாம். அதன் ஒரு பகுதியாக நேற்று மும்பையில் 'ஆர்ஆர்ஆர்' தியேட்டர் ஒன்றிற்குச் சென்றுள்ளார் ராம்சரண். வட இந்திய ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகிறார் ஜுனியர் என்டிஆர்.
ராம்சரண் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். என்டிஆர் அடுத்து கொரட்டலா சிவா இயக்கத்திலும், அதற்கடுத்து 'கேஜிஎப், சலார்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.