நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? | காக்கா கழுகு போய்... கழுதை கதை சொன்ன ரஜினி : ‛வேட்டையன்' இசை வெளியீட்டில் சுவாரஸ்யம் | மாதம் ஒரு பெண் தேடும் மகத்! 'காதலே காதலே' படத்தின் டீசர் வெளியானது!! |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி ஹீரோக்களில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இருவருமே இருக்கிறார்கள். அவர்களை நாயகர்களாக நடிக்க வைத்து 'ஆர்ஆர்ஆர்' படத்தை இயக்கி அவர்களை பான்--இந்தியா நடிகர்களாகவும் மாற்றிவிட்டார் ராஜமவுலி.
பட வெளியீட்டிற்கு முன்பாக பிரமோஷனுக்காக பெரும்பாலான ஊர்களுக்கு ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் சென்றனர். படம் வெளியாகி ஒரு வாரம் ஆனவுடன் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் தனித்தனியே தங்களை பிரமோஷன் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தங்களுக்குக் கிடைத்த பிரபலத்தை அடுத்தடுத்த படங்களின் பயன்படுத்திக் கொள்ளவே இந்த ஏற்பாடு. மும்பையில் உள்ள பிரபல செலிபிரிட்டி மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் இணைந்து சில நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்களாம். அதன் ஒரு பகுதியாக நேற்று மும்பையில் 'ஆர்ஆர்ஆர்' தியேட்டர் ஒன்றிற்குச் சென்றுள்ளார் ராம்சரண். வட இந்திய ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகிறார் ஜுனியர் என்டிஆர்.
ராம்சரண் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். என்டிஆர் அடுத்து கொரட்டலா சிவா இயக்கத்திலும், அதற்கடுத்து 'கேஜிஎப், சலார்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.