போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் வரும் நவம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கும் படம் களம்காவல். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விநாயகன் நடித்துள்ளார். இயக்குனர் ஜிதின் கே ஜோஸ் இயக்கியுள்ளார். படத்தை மம்முட்டியே தயாரித்துள்ளார். ஆச்சரியமாக மம்முட்டி வில்லன் கதாபாத்திரத்திலும் விநாயகன் ஒரு துப்பறியும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஆனால் முதலில் மம்முட்டியின் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் பிரித்விராஜ் தான் என்று சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார் படத்தின் இயக்குனர் ஜிதின் கே ஜோஸ்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த படத்தின் கதையை எழுதும்போதே பிரித்விராஜை மனதில் வைத்து தான் எழுதினேன். ஆனால் அப்போது அவர் எம்புரான் படப்பிடிப்பில் பிசியாக இருந்தார். இந்த கதையை கேட்டுவிட்டு நிச்சயமாக இந்த கதாபாத்திரம் மம்முட்டிக்கு பொருத்தமாக இருக்கும். அவரிடம் சொல்லுங்கள் என்று சொன்னார். அவர் சொன்னது போலவே மம்முட்டிக்கு அந்த கதாபாத்திரமும் பிடித்துப்போய், அவர் நடிக்க ஒப்புக்கொண்டதுடன் படத்தை தயாரிக்கவும் முன் வந்தார். அதே சமயம் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகனை நடிக்க வைக்க சிபாரிசு செய்ததும் மம்முட்டி தான்” என்று கூறியுள்ளார்.