இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

நடிகை குஷ்புவின் கணவரான, இயக்குனர் சுந்தர்.சி தற்போது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை அடுத்து ரஜினியின் 173-வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் அவர் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே அப்படத்திலிருந்து தான் விலகுவதாக ஒரு அறிக்கை வெளியிட்டார் சுந்தர்.சி. அதையடுத்து அவர் சொன்ன கதை ரஜினிக்கு பிடிக்கவில்லை என்கிற தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் அந்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்தே குஷ்புவின் சோசியல் மீடியாவில் சிலர் மோசமான கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். ஒருவர் சுந்தர். சியின் பரிதாபகரமான கதை விவரிப்பு காரணமாக ரஜினியும், கமலும் உங்கள் கணவரை தாங்கள் தயாரிக்கும் படத்திலிருந்து வெளியேற்றி விட்டதாக கேள்விப்பட்டோம். அப்படியானால் இந்திய திரையுலகம் உங்கள் கணவர் சுந்தர்.சியை குப்பை தொட்டியில் போட வேண்டிய நேரமா? என்பது உள்ளிட்ட பலதரப்பட்ட கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள். இதனால் கடும் கோபத்திற்கு ஆளான குஷ்பூ, தனது எக்ஸ் பக்கத்தில், என் செருப்பு சைஸ் 41. அடி வாங்க தயாரா? என்று ஒரு பதிவு போட்டுள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.