ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
ஹிந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த குஷ்பு, தமிழில் 'வருஷம் 16' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். 90களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக கலக்கிய குஷ்பு, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, சரத்குமார் போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதேபோல சிறிய நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.
சின்னத்திரையிலும் தனது ஆதிக்கத்தை செலுத்திய குஷ்பு, தற்போது சினிமாவில் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் குஷ்பு காலடி எடுத்து வைத்து 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
7 வயதில் குழந்தையாக நடிக்க தொடங்கிய நான், இன்று 45 ஆண்டுகளை கடந்துள்ளேன். உற்சாகமான இந்த பயணத்தில் நிறைய விஷயங்களை கற்றுள்ளேன். என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அத்தனை பேருமே சிறப்பானவர்கள்.
ஒரு நடிகை என்பதை தாண்டி வேறு எதையுமே என்னால் நினைக்க முடியவில்லை. இந்த மாபெரும் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்கள், எனக்கு ஆதரவு தந்தவர்கள், ஊக்குவித்தவர்கள், விமர்சித்தவர்கள், கற்றுக்கொடுத்தவர்கள், அன்பு செலுத்தியவர்கள் எல்லாவற்றையும் விட என்னை நம்பியவர்கள் அத்தனை பேருக்கும் நன்றி. இனியும் எனது சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து வழங்குவேன்.
இவ்வாறு குஷ்பு பதிவிட்டுள்ளார்.