இறந்து போனவர்களை ஏன் பாட வைக்க வேண்டும்? ஹாரிஸ் ஜெயராஜ் கேள்வி | தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை கடந்த 'குட் பேட் அக்லி' | தமன்னா பற்றிய பகிர்வு: மீண்டும் சர்ச்சையில் ஊர்வசி ரத்தேலா | குட் பேட் அக்லி வெற்றி எதிரொலி! ஆதிக் ரவிச்சந்திரனுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்!! | விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா |
மலையாளத்தில் இந்த ஆண்டில் வெளியான பிரம்மயுகம், மஞ்சும்மேல் பாய்ஸ், ஆடுஜீவிதம், ஆவேஷம், வர்ஷங்களுக்கு ஷேஷம், பிரேமலு, ஆட்டம், குருவாயூர் அம்பலநடையில், உள்ளொழுக்கு, வாழ, ஏஆர்எம், கிஷ்கிந்தா காண்டம் உள்ளிட்ட சில படங்கள் வெற்றி பெற்று தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்தது. இவற்றில் மஞ்சும்மேல் பாய்ஸ், ஆடுஜீவிதம், ஆவேஷம், பிரேமலு, ஏஆர்எம் படங்கள் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆனாலும் பல படங்கள் தோல்வி அடைந்து பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், இதனால் கோடி கணக்கில் சம்பளம் பெற்ற நடிகர்கள் பணத்தை திருப்பி தரவேண்டும் என்று மலையாள தயாரிப்பாளர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
2024ம் ஆண்டில் மலையாளத்தில் 199 படங்கள் திரைக்கு வந்து 26 படங்கள் மட்டுமே லாபம் பார்த்துள்ளன. இந்த படங்களின் தயாரிப்பு செலவு 1000 கோடி. ஆனால் இந்த படங்களின் மூலம் 350 கோடி மட்டுமே லாபம் கிடைத்துள்ளது. 650 கோடி முதல் 700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. நடிகர்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் ஏற்கவில்லை. இது தொடர்ந்தால் மலையாள சினிமா துறை பெரிய இழைப்பை சந்திக்கும். இதனால், நஷ்டம் அடைந்த படங்களின் நடிகர்களும், உதவி செய்ய முன்வரும் நடிகர்களும் தயாரிப்பாளர்களின் நஷ்டத்தை ஈடு செய்ய உதவ வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.