தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் |

கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்கள் எல்லாம் 1000 கோடி வசூலை கடந்துவிட்டது. ஆனால், தமிழ் சினிமாவில் இதுவரை 1000 கோடி வசூல் எட்டாக்கனியாகவே உள்ளது. அதற்கு காரணம் இங்கு படத்தின் தயாரிப்பில் பெரும்பகுதி நடிகர்களின் சம்பளத்திற்கே போய்விடுகிறது. மீதமுள்ள தொகையை வைத்து குவாலிட்டியான சினிமா எடுப்பதில் சிக்கல் இருப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் எல்லாம் 150 கோடிக்கு மேல் சம்பளமாக பெறுவதாக கூறுகின்றனர். அவர்களை வைத்தே வியாபாராமும் கூடும் என்பதால் சிலர் அந்த சம்பளத்தை தரவும் முன்வருகின்றனர். ஆனால், நடிகர் சம்பளம் போக, நடிகை, தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் சம்பளத்தையும் கொடுத்து, படத்திற்கும் பட்ஜெட் ஒதுக்குவதால், மேக்கிங்கில் சில சமயம் சமரசம் செய்ய வேண்டியுள்ளது. அதுவே, மேக்கிங்கிற்கு கூடுதல் பட்ஜெட் ஒதுக்கினால், படத்தின் குவாலிட்டி மேலும் மேம்படுவதுடன், படத்தின் வியாபாரமும் வலுப்படும். இதை கருத்தில் கொண்டு முன்னணி நடிகர்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என சில இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கூட அவ்வப்போது குரல் கொடுத்து வந்தனர்.
இந்த நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கப் பொதுக்குழு இன்று சென்னையில் நடைபெற்றது. அதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முன்னணி நடிகர்களின் சம்பளம் தொடர்பாக தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அதாவது, ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிம்பு, விஷால், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள், தங்கள் முழு சம்பளத்திற்கு பதிலாக படம் வியாபாரமாகும் தொகையில் பங்கு பெற்று நடிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில் படத்தின் வியாபாரத்தில் குறிப்பிட்ட சதவீத பங்கை முன்னணி நடிகர்கள் சம்பளமாக பெறுவர். இதனை அந்த நடிகர்கள் ஏற்பது சிரமம் தான் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். நடைமுறைக்கு வந்தால், தமிழ் திரைத்துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வரும்.