Advertisement

சிறப்புச்செய்திகள்

சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார்

09 நவ, 2025 - 01:02 IST
எழுத்தின் அளவு:
Anupama-Parameswaran-Shocked-As-Cyberbully-Turns-Out-To-Be-A-20-Year-Old-Girl-From-Tamil-Nadu


கேரளாவைச் சேர்ந்த கவுரி கிஷன் '96' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து 'மாஸ்டர், கர்ணன், ஹாட்ஸ்பாட், போட்' உள்ளிட்ட படங்களிலும் இந்த வாரம் வெளியான 'அதர்ஸ்' படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் உருவ கேலி செய்த பத்திரிகையாளருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக பல சினிமா பிரபலங்கள், மற்ற பிரபலங்கள், ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர்.

கவுரி கிஷனைத் தொடர்ந்து தற்போது 'பைசன்' பட நடிகை அனுபமா பரமேஸ்வரன், சமூக வலைத்தளங்களில் தன் மீது ஒரு நபர் தொடர்ந்து அவதூறு, வெறுப்புகளை பரப்பி வருவதாக சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டா தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சில நாட்களுக்கு முன்பு, ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு, என்னை, என் குடும்பத்தை, மற்றும் என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களை குறித்து மிகவும் அநாகரிகமான மற்றும் பொய்யான உள்ளடக்கத்தை பரப்பி வருவது என் கவனத்திற்கு வந்தது. அந்த பதிவுகள் மாற்றப்பட்ட படங்கள் மற்றும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியிருந்தன. இத்தகைய இலக்கு வைக்கப்பட்ட தொல்லை ஆன்லைனில் பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது.

மேலும் விசாரணையில், அதே நபர் வெறுப்பை பரப்புவதற்காக மட்டுமே பல போலி கணக்குகளை உருவாக்கியிருந்தார் என்பது தெரியவந்தது, என்னுடன் தொடர்புடைய ஒவ்வொரு பதிவிலும் தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தை பதிவு செய்து கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

இதை அறிந்தவுடன், நான் உடனடியாக கேரளாவில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தேன். அவர்களின் பதில் விரைவானதும் திறமையானதுமாக இருந்தது. மற்றும் அவர்களின் உதவியுடன், இந்த செயல்களுக்கு பின்னால் இருந்த நபர் அடையாளம் காணப்பட்டார்.

அது தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 வயது பெண் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அவளது இளம் வயதைக் கருத்தில் கொண்டு, நான் அவளது அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை, ஏனெனில் அவளது எதிர்காலத்தை அல்லது மன அமைதியைக் கெடுக்க விரும்பவில்லை.

இருப்பினும், இந்த சம்பவத்தை பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். ஸ்மார்ட்போன் வைத்திருப்பது அல்லது சமூக ஊடகத் தளங்களுக்கு அணுகல் இருப்பது யாருக்கும் மற்றவர்களை தொல்லை செய்ய, அவதூறு செய்ய, அல்லது வெறுப்பைப் பரப்ப உரிமை அளிக்காது. ஆன்லைனில் ஒவ்வொரு செயலும் ஒரு தடயத்தை விட்டுச் செல்கிறது, மற்றும் பொறுப்புக்கூறலைப் பின்பற்றும்.

நாங்கள் சட்ட நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளோம், மற்றும் அந்த நபர் தனது செயல்களின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்.

நடிகராகவோ அல்லது பொது நபராகவோ இருப்பது அடிப்படை உரிமைகளை பறித்துவிடாது. சைபர் புல்லிங் ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும், மற்றும் பொறுப்புக்கூறல் உண்மையானது,” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த சில பல வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் பலர் அவதூறுகளையும், வெறுப்புகளையும், பொய்களையும் பரப்பி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு சில முன்னணி நடிகர்களின் மேனேஜர்கள் இதைச் செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இப்படியானவர்கள் மீது சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்களும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், சைபர் கிரைம் போலீசாரும் அவர்களைக் கண்காணித்து கடும் தண்டனையை வாங்கித் தர வேண்டும் என்று பலரும் கருதுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'ஜனநாயகன்' படத்திற்குக் கடும் சவாலாக இருக்கும் 'ராஜா சாப்''ஜனநாயகன்' படத்திற்குக் கடும் ... ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in