தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது 'முன்னாள் தலைவர் விஷால் மீது கூறப்பட்ட 8 கோடி ரூபாய் முறைகேடு பிரச்னை என்ன ஆனது' என்ற கேள்விக்கு தற்போதைய தலைவர் முரளி ராமசாமி அளித்த பதிலில் கூறியதாவது:
தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்தபோது 8 கோடி வரை வைப்புநிதியில் முறைகேடு நடந்திருப்பதாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றம் சாட்டினார். அதை விசாரிப்பதற்காக அவர் தலைமையிலேயே கமிட்டி போடப்பட்டிருக்கிறது. விஷால் தலைமைக்கு பிறகு 2 ஆண்டுகள் சங்கம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது அரசு சார்பிலேயே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அறிக்கையும் வந்திருக்கிறது. அதையும் கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும். அது சம்பந்தமாகவும் கூடி பேசியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.