கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” |

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசிய வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் அப்படி பேசியதற்கு எதிராக பல திரை பிரபலங்களும் அவருக்கு கண்டனம் தெரிவித்தார்கள். அதோடு நடிகை குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து மன்சூரலிகானை கைது செய்ய வைத்தார். மேலும், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவியும் திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார்.
இந்த விவகாரம் சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், அது குறித்து திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார் மன்சூர் அலிகான். என்றாலும் தற்போது அவர் திரிஷா, குஷ்பூ, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்டஈடு வழக்கு தொடரப்போவதாக சொல்லி இன்னொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக இந்த பிரச்னை இத்தோடு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் புதிய பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.