ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்கள், அவரைப் பற்றிய ரெபரன்ஸ் ஆகியவை தற்போது வெளியாகும் புதிய படங்களில் இடம் பெற்றால் அந்தப் படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து வசூலில் சாதனை படைக்கும் என்ற ஒரு சென்டிமென்ட் உருவாகிவிட்டது.
சமீபத்தில் தமிழில் வெளியான அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' படத்தில் அவரது மூன்று பாடல்களைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தின் தயாரிப்பாளரோ, இயக்குனரோ, அல்லது படத்தின் நாயகன் அஜித்தோ இளையராஜாவை நேரில் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவரது பாடல்களைப் பயன்படுத்த அனுமதி கேட்டிருக்க வேண்டும் என்ற கருத்துதான் அதிகம் இருந்தது.
மலையாள சினிமா உலகில் இளையராஜாவை எந்த அளவிற்கு நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள் என்பது சமீபத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த 'தொடரும்' படத்தைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும். படத்தில் கார் டிரைவரான மோகன்லால் இளையராஜாவின் ரசிகராக நடித்திருப்பார். இளையராஜாவைப் பாராட்டிப் பேசிய வசனமும் படத்தில் இடம் பெற்றது. அவரது பாடல்களை அவரிடம் முறையாக அனுமதி பெற்று பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்காக அவரை நேரில் சந்தித்து படத்தின் கதையைப் பற்றிச் சொல்லி அனுமதி வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர். 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மலையாள சினிமாவில் பெரும் வசூல் சாதனையைப் படைத்துள்ளது இந்தப் படம்.
கடந்த வருடம் வெளிவந்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்திலும் இளையராஜாவின் இசையில் வெளிவந்த 'குணா' படத்தின் 'கண்மணி அன்போடு' பாடல் இடம் பெற்றதுதான் படத்தின் ஹைலைட். அந்தப் படமும் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
மலையாள சினிமா ரசிகர்கள் மற்ற மொழிக் கலைஞர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் நேசித்துவிட மாட்டார்கள் என்று சொல்வார்கள். ஆனால், இளையராஜா அதற்கு விதிவிலக்கானவர் என்பது மேலே சொன்ன படங்களின் வரவேற்பும், வசூலும் உணர்த்தும்.