‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
புதுடில்லி: ஹூண்டாய் காருக்கு விளம்பரம் செய்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகியோருக்கு சட்ட சிக்கல் எழுந்துள்ளது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த கீர்த்தி சிங் என்ற பெண் 2022ல் ஹூண்டாய் நிறுவனத்தின் அல்காசர் காரை வாங்கி உள்ளார். 6 மாதத்திற்குள் இந்த காரில் நிறைய பிரச்னைகள் வந்ததாக தெரிகிறது. இதனால் ஹூண்டாய் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதோடு அந்த காரை விளம்பரப்படுத்திய பாலிவுட் நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் தீபிகா படுகோனே மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறியிருந்தார். பரத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், போலீசார் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.