கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படம், 'ஜவான்'. இதில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சானியா மல்ஹோத்ரா, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் வருகின்ற செப் 7ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு ஷாருக்கான் சமீபத்தில் பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் , “ஜவான் படத்தில் நடிப்பது பெரிய சவாலாக இருந்தது . இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி மிகவும் கூலாக இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் அவரும் ஒருவர். ஜவான் படத்தில் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்” என பகிர்ந்துள்ளார் .