Advertisement

சிறப்புச்செய்திகள்

தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை

17 மே, 2025 - 04:07 IST
எழுத்தின் அளவு:
Did-you-break-up-the-family...-False-accusation-Ravi-Mohans-mother-in-law-requests-to-live-with-her-daughter

நடிகர் ரவி மோகன்(ஜெயம் ரவி) தனது காதல் மனைவி ஆர்த்தியை பிரிந்து, பாடகி கெனிஷா உடன் நெருக்கம் காட்டி வருகிறார். சமீபத்தில் இருவரும் ஐசரி இல்ல திருமண விழாவில் பங்கேற்றபோது அதை விமர்சித்தார் ஆர்த்தி. இதையடுத்து மனைவி உடனான பிரிவு, கெனிஷா பற்றி ரவி வெளியிட்ட அறிக்கையில் ‛‛நான் என் மனைவியை மட்டுமே பிரிந்தேன், மகன்களை அல்ல. என் வாழ்வு எனது மகன்களுக்காகவே. என்னை கணவராக பார்க்கவில்லை, தங்க முட்டையிடும் வாத்தாக பார்த்தார். கெனிஷா என் நண்பராக இருந்தவர். தற்போது ஒரு அழகான துணையாகி உள்ளார் என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஜெயம் ரவியின் மாமியாரும், தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் வெளியிட்ட அறிக்கை : 25 ஆண்டுகளாக சினிமா துறையில் இருக்கிறேன். பட வெளியீடு தவிர்த்து எதற்காகவும் நான் மீடியா முன் வந்தது இல்லை. ஆனால் இப்போது என்னை பற்றி எழுந்துள்ள அவதூறுகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளேன்.

பொய்யான குற்றச்சாட்டு
கொடுமைக்காரி, குடும்பத்தை பிரித்தவள், பணப்பேய், சொத்தை அபகரித்தவள் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் என்னைப் பற்றி உலவி வருகின்றன. என் குழந்தைகளின் எதிர்காலம் கருதி மவுனமாய் இருந்தேன். என் மாப்பிள்ளை(ஜெயம் ரவி) என்னிடம் நீங்கள் படமும் தயாரிக்க வேண்டும் என்றார். அவரை வைத்து அடங்கமறு, பூமி, சைரன் என மூன்று படங்களை தயாரித்தேன். இதற்காக ரூ.100 கோடி கடன் பெற்றேன். அந்த பணத்தில் 25 சதவீதம் அவருக்கு சம்பளமாக வழங்கினேன். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

ஆனால் நான் வாங்கிய கடனுக்கு அவரை பொறுப்பேற்க வைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை என் மீது வைத்துள்ளார். இதில் உண்மை இல்லை. அவரை என் மாப்பிள்ளை என்பதைத் தாண்டி சொந்த மகனாகவே கருதினேன். அவருக்கு எந்த ஒரு கஷ்டமும் வரக்கூடாது என்பதற்காக பல கோடி ரூபாய் நஷ்டத்தையும், மன உளைச்சலையும் நான் மட்டுமே ஏற்றுக் கொண்டேன். கோடிக்கணக்கான ரூபாய்க்கு அவரை பொறுப்பேற்க வைத்ததற்கான ஆதாரத்தை வெளியிட சொல்லுங்கள்.

பொய் உங்களை தரம் தாழ்த்துகிறது
இன்றும் என் மகனாகவே நினைக்கும் ஜெயம் ரவிக்கு ஒரு வேண்டுகோள். உங்கள் மீது அனுதாபம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நீங்கள் சொல்கின்ற பொய்கள், உங்களை ஹீரோ பிம்பத்திலிருந்து தரம் தாழ்த்தி விடுகிறது. நீங்கள் என்றும் ஹீரோவாகவே இருக்க வேண்டும். இது வார்த்தைக்கு வார்த்தை நீங்கள் அம்மா அம்மா என்று அழைப்பீர்களே அந்த அம்மாவின் ஆசை. என் பேர குழந்தைகளின் சந்தோஷத்திற்காக என் மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். அழகாக வாழ்ந்து வந்த ஒரு மகளை வாழாவெட்டியாக பார்க்கும் துயரம் ஒரு தாயின் மனதிற்கு தான் தெரியும். அந்த துர்பாக்கியம் எந்தப் பெற்றோருக்கும் வரக்கூடாது.

ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் ஏற்கனவே நான் அனுபவித்து வரும் வேதனைகளோடு மகளின் குடும்பத்தை பிரித்தவள், சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள். அதை தாங்கும் சக்தி என் மனதிற்கு இல்லை.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலிமே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் ... இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in