ஊழல் அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கும் ‛ஜனநாயகன்' | ஆபாச வெப் சீரிஸ் : 25 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை | ‛விஸ்வாம்பரா' படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் மவுனி ராய் | கதையில் சமரசம் செய்யாத ராஜமவுலி : பிருத்விராஜ் வெளியிட்ட தகவல் | டியூட் படத்தில் சிவகார்த்திகேயனா? வைரலாகும் வீடியோ | கூலி படத்தில் கமலா... : லோகேஷ் கனகராஜ் அளித்த பதில் | தற்கொலைக்கு முயற்சித்தாரா ‛டிக் டாக்' இலக்கியா... : ஸ்டன்ட் இயக்குனர் மீது குற்றச்சாட்டு | மீண்டும் இசையில் கவனம் செலுத்தப் போகிறேன்: விஜய் ஆண்டனி | மீண்டும் ‛அந்த 7 நாட்கள்' படத்தில் நடிக்கும் கே.பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஒரே தமிழ் படத்தில் நடித்த வங்காள நடிகர் |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் திடீரென மறைந்தார். இலங்கையில் காலமான அவரது உடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு திரையுலகினரின் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. பின்னர் இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்தில் உள்ள அவரது பண்ணை இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
இளையராஜா குடும்பத்தில் உள்ள பெரியப்பா, சித்தப்பா மகன்கள், மகள்கள் அனைவருமே திரையுலகத்தில் உள்ளார்கள். நெருக்கமான பாசத்தில் இருந்தவர்கள். பவதாரிணியின் மறைவு அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பவதாரிணியின் சித்தப்பா கங்கை அமரனின் மகன் இயக்குனர் வெங்கட் பிரபு, பவதாரிணியின் பெரியப்பா மகள் காஸ்ட்டியூம் டிசைனர் வாசுகி பாஸ்கர் ஆகியோர் பவதாரிணியின் இழப்பு பற்றி அப்போதே அவர்களது கடும் துயரத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.
இன்று பவதாரிணியின் பிறந்தநாள். அவரை நினைவு கூர்ந்து வெங்கட் பிரபு, “என் தங்கை பவதாரிணிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீ நல்லதொரு இடத்தில் மகிழ்ச்சியாக இருப்பாய் என எங்களுக்குத் தெரியும்,” என இதயம் நொறுங்கிய எமோஜிக்களுடன் பதிவிட்டுள்ளார்.