தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் - அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள 'பைசன்' படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்.,17ல் ரிலீசானது. இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் வரவேற்பை பெற்ற நிலையில், தனது படங்களுக்கு இளையராஜா உள்ளிட்ட மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை வைக்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிவாஸ் கே பிரசன்னா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நான் ரொம்ப ஜாலியான பர்சன். சீரியஸாக இருந்தால் எனக்கு மியூசிக் வராது. மாரி செல்வராஜ் என்னை அதிகம் நம்பினார். அந்த நம்பிக்கை தான் என்னை மேம்படுத்த உதவியது.
படத்தில் வரும் 'சீனிக்கல்' பாடலுக்கு பதிலாக முதலில் 'மலர்ந்தும் மலராத' பாடலையே மாரி செல்வராஜ் வைக்க நினைத்திருந்தார். அதை என்னிடம் சொல்லி, அதற்காக உரிய இசையமைப்பாளரிடம் 'ரைட்ஸ்' வாங்கப்போகிறேன் என்றார். ரைட்ஸ் வாங்குவது எல்லாம் என்னிடம் வேலைக்கே ஆகாது. ஒரு இசையமைப்பாளரை வைத்துக்கொண்டு வேறொரு இசையமைப்பாளரின் பாட்டுக்கு போவது எப்படி என கோபமடைந்தேன். இருங்க இப்பவே ஒரு டியூன் போடுறேன், பிடிக்கலைனா ரைட்ஸ் வாங்கிக்கோங்க அப்படினு சொன்னேன். அந்த கோபத்துலயே 10 நிமிஷத்துல போட்ட டியூன் தான் அந்த சீனிக்கல் பாடல். அடுத்த 20 நிமிடத்தில் அதற்கான வரிகளை மாரி செல்வராஜ் எழுதிவிட்டார். நான் இசையமைப்பாளராக இருக்கும்போது என் பாடல் மட்டும்தான் வரவேண்டும் என அவரிடம் கூறினேன்.
நான் ஏன் இளையராஜா பாடலையோ, யுவன் சங்கர் ராஜா பாடலையோ பயன்படுத்த வேண்டும்? நான் ஒன்றும் மற்றவர்களை விட குறைவான திறன் கொண்ட இசையமைப்பாளரா? 80களின் இடையே நடக்கும் கதை என்பதால் ரியலிஸ்டிக்கான விஷயங்களுக்காக 'ஹே உன்னைத்தானே' எனும் இளையராஜா பாடலை தான் மாரி செல்வராஜ் வைத்திருந்தார். ஆனால் அந்த பாடலை மாற்றிவிட்டு ஹிந்தி பாடலை சேர்த்தோம். இவ்வாறு அவர் கூறினார்.