வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

இன்றைய சமூக வலைத்தள யுகத்தில் சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் ஆகியோரது தனிப்பட்ட ஆளுமை உரிமைகளை வணிக ரீதியாக சிலர் எந்தவிதமான அனுமதியும் இன்றி பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக ஏஐ மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் என உருவாக்கி அவற்றை சமூக வலைத்தளங்கள், யுடியூப், ரீல்ஸ் எனப் பயன்படுத்துகிறார்கள்.
தங்களது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சினிமா பிரபலங்கள் நீதிமன்றத்தை அணுகி மற்றவர்களின் வணிக பயன்பாட்டுக்குத் தடை வாங்குகிறார்கள். இதற்கு முன்பு ஐஸ்வர்யா ராய், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, இளையராஜா ஆகியோர் இப்படி பெற்றுள்ளார்கள். அவர்களது வரிசையில் ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் டில்லி உயர்நீதிமன்றத்தில் அவருக்கான ஆளுமை உரிமைகளைப் பெறுவதற்கான வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது குறித்த வரம்பு மீறல் 'லின்க்'குகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அடுத்த விசாரணை டிசம்பர் 22ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.




