துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
ரவிக்குமார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் வெளியான படம் 'அயலான்'. இப்படத்தையும் 'கேப்டன் மில்லர்' படத்தையும் ஒரே நாளில் தெலுங்கில் வெளியிட அங்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால், இரண்டு படங்களின் வெளியீடும் ஜனவரி 26க்குத் தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் 'கேப்டன் மில்லர்' படம் மட்டும் வெளியானது. ஆனால், 'அயலான்' படம் வெளியாகவில்லை.
படத்திற்கு 'டிஐ' தொழில்நுட்பம் செய்து தந்த ஷாரூக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனத்திற்கு 'அயலான்' தயாரிப்பாளர் முழு தொகையையும் தராமல் பாக்கி வைத்ததால்தான் அவர்கள் தெலுங்கு பதிப்பு வெளியீட்டிற்காக நீதிமன்றத் தடை வாங்கியதாகத் தகவல் வெளியானது.
கடந்த வாரம் 'அயலான்' படத்தின் தமிழ் பதிப்பு ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால், தெலுங்கு பதிப்பு ஓடிடியிலும் வெளியாகவில்லை. தியேட்டர் வெளியீடு பற்றிய எந்த ஒரு தகவலும் இதுவரையில் இல்லை. தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடாமல் அமைதி காத்து வருகிறது.
தெலுங்கு வெளியீடு பற்றி எதுவும் சொல்லாமல் தமிழ் வெளியீட்டிற்காகவும், அதன் வரவேற்புக்காகவும் நன்றி தெரிவித்துள்ளார்கள். “எங்கள் குறிப்பிடத்தக்க பயணத்தை அரவணைப்புடனும், அன்புடனும் ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் நன்றி. அயலான் - இதயங்களை வென்றவன்,” என 'நன்றி கார்டு' போட்டு முடித்துவிட்டார்கள்.