ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

சமீப காலமாக தமிழகத்தில் பிரபலங்களின் வீடு, அலுவலகங்களில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுப்பது தொடர்ந்து வருகிறது. இவ்வாறான மிரட்டல் விடுக்கும் நபர்களை பிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர். இந்த நிலையில், இசையமைப்பாளர் இளையராஜாவின் அலுவலகத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள இளையராஜாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்திருந்தார். இதனையடுத்து உடனடியாக மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலகத்தின் அனைத்து இடங்களிலும் மேற்கொண்ட சோதனையில் எந்த வெடிகுண்டும் கிடைக்கவில்லை. இதனால் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது. திடீரென இளையராஜாவின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது, அதிகாரிகளின் சோதனை காரணமாக சிறிது நேரம் அதனை சுற்றியுள்ள இடங்களில் பரபரப்பான சூழல் நிலவியது.