அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு தமிழ் இயக்குனரான அட்லி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். பிரம்மாண்டமான பொருட் செலவில் அப்படம் தயாராகி வருகிறது. அடுத்த வருடம் இப்படம் வெளியாகுமா அல்லது 2027ல் வெளியாகுமா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
இந்தப் படத்திற்குப் பிறகு மீண்டும் தமிழ் இயக்குனருடன் அல்லு அர்ஜுன் கூட்டணி வைக்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள அந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம்.
'கூலி' படத்தை எதிர்பார்த்த அளவிற்கு லோகேஷ் தரவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. அதனால், ரஜினி, கமல் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்காது என்றார்கள். என்றாலும், 'கூலி' படத்தில் வாங்கியதை விட கூடுதல் சம்பளத்துடன் அவரை ஒப்பந்தம் செய்ய சில தயாரிப்பாளர்கள் தயாராக உள்ளார்களாம்.