இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா படத்தின் முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுன் அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் அவரது நடிப்பு, மேனரிசம் எல்லாமே தெலுங்கு மொழியை தாண்டி தென்னிந்தியா மட்டுமல்லாது வட இந்தியாவிலும் அவருக்கு மிகப்பெரிய புகழை சம்பாதித்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் தனது மனைவி சினேகாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொற்கோவில் சென்று தரிசனம் செய்துள்ளார் அல்லு அர்ஜுன்.
அதை தொடர்ந்து அங்கிருந்து அட்டாரி எல்லைப்பகுதிக்கு குடும்பத்துடன் சென்றார் அல்லு அர்ஜுன்.. அங்கு அவர்களை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளும் வீரர்களும் வரவேற்றனர். அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள இடங்களை சுற்றி காட்டிய வீர்கள் அவரது மகன் சளைக்காமல் கேட்ட கேள்விகள் சந்தேகங்களுக்கு எல்லாம் பதில் அளித்தனர்.. அல்லு அர்ஜுன் அங்கே வந்ததை அறிந்து ரசிகர்கள் பலர் நூற்றுக்கணக்கில் கூடினர். அவர்களை பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் அல்லு அர்ஜுன்.