'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் வருகிற டிசம்பர் 17-ந்தேதி வெளியாக உள்ளது. படப்பிடிப்புக்கு நடுவே எப்போது ஓய்வு கிடைத்தாலும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ள அல்லு அர்ஜூன், தற்போது தனது மனைவி, மகன், மகளுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அந்தவகையில் இந்த ஆண்டு மட்டும் தனது குடும்பத்துடன் மூன்று முறை சுற்றுலா சென்ற அல்லு அர்ஜூன் தற்போது புஷ்பா படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் நான்காவது முறையாக மாலத்தீவுக்கு சென்று ரிலாக்ஸ் செய்து வருகிறார். இதையடுத்து ஐதராபாத் திரும்பியதும் புஷ்பா படத்தின் மீதமுள்ள மூன்று பாடல் காட்சிகளிலும் நடிக்கப்போகிறார்.