சின்னத்திரை காமெடி நடிகை ஷர்மிளா மீது பாஸ்போர்ட் மோசடி வழக்கு பதிவு | சித்தார்த்தை திருமணம் செய்ய இதுதான் காரணம் : அதிதி ராவ் வெளியிட்ட தகவல் | மீண்டும் அஜித் உடன் இணைந்தால் மகிழ்ச்சியே : ஆதிக் ரவிச்சந்திரன் | ஓடும் பேருந்தில் கொலை : பரபரனு நகரும் டென் ஹவர்ஸ் டிரைலர் | புத்திசாலித்தனம் இல்லாத முடிவா? : விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல் கொடுத்த சாந்தனு | நடிகையின் ஆபாச வீடியோ.... நாசமா போங்க என பாடகி சின்மயி காட்டம் | ஏப்ரல் மாதத்தில்….. மூன்றே மூன்று முக்கிய படங்கள் போதுமா ? | இரண்டே நாட்களில் 100 கோடி கடந்த 'சிக்கந்தர்' | 'வா வாத்தியார்' வராமல் 'சர்தார் 2' வருவாரா ? | இரண்டு படம் ஜெயித்து விட்டால், இப்படியா… |
புராணங்களை படமாக்குவதில் தெலுங்கு சினிமா எப்போதும் அதிக ஆர்வம் கொண்டுள்ளது. பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராமவுலி மகாபாரதத்தை தனது கனவு படமாக அறிவித்துள்ளார். அதேபோன்று அல்லு அர்ஜூன் தனது கனவு படமாக ராமாயணத்தை அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் என்ற படம் ராமாயணத்தை தழுவி எடுக்கப்படுவதால் அல்லு அர்ஜூன் தனது திட்டத்தை கைவிட்டுவிட்டதாக கூறப்பட்டது.
இதுகுறித்த கேள்விக்கு அல்லு அர்ஜூன் அளித்த பதில் வருமாறு: நான் அறிவித்த ராமாயணம் படம் நின்றுவிடவில்லை, கைவிடப்படவும் இல்லை. ஒன்றரை வருடமாக தயாரிப்புக்கு முந்தைய பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் ஆறு மாதத்துக்குள் இந்த பணி முடிவடைந்துவிடும். அடுத்த ஆண்டு ராமாயணம் படப்பிடிப்பு தொடங்கிவிடும்.
இந்த படம் இந்தியாவிலேயே பெரிய படமாகவும், பெரிய பட்ஜெட்டில் எடுத்த படமாகவும் இருக்கும். ராமாயணம் படத்தை நாங்கள் எடுக்க போவதாக அறிவித்த நேரத்தில் பட்ஜெட் ரூ.500 கோடி. இப்போது இந்த மதிப்பீடு இன்னும் அதிகமாகும். இரட்டிப்பு ஆனாலும் ஆச்சரியப்பட தேவையில்லை. ஆனால் படம் எடுப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பணிகள் நடைபெறுகின்றன என்கிறார் அல்லு அர்ஜூன்.