‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்த சமயத்தில், அதன் தீவிரம் தெரியாமல், திரையுலகினர் பலரும் தங்களது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வந்தனர். அதனால் வயதானவர்கள் மட்டுமன்றி, இளம் நடிகர்களுக்கு கூட கொரோனா தொற்று ஏற்பட்டது அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், சமீபத்தில் அதிலிருந்து மீண்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தினரையும் தனது வீடு மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரையும் தடுப்பூசி போட செய்துள்ளார். தனது பணியாளர்களுக்கு தடுப்பூசி தடையில்லாமல் கிடைப்பதற்கு, தானே முன்னின்று ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார் அல்லு அர்ஜுன்.