தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஒரு காலத்தில் மேடை இசை கச்சேரிகளை கடுமையாக விமர்சித்த இளையராஜா, தற்போது தனது கருத்தை மாற்றிக் கொண்டு ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். உலக நாடுகள் முதல் உள்ளூர்கள் வரை அவரது இசை நிகழ்ச்சி நடந்து வருகிறது. தனது இசை அனுபவங்களையும் வெளிப்படையாக பேசி வருகிறார்.
அடுத்து சிம்பொனிக்கான இசையை உருவாக்கி வரும் இளையராஜா அதே கையோடு மகள் பவதாரிணி பெயரில் ஒரு மகளிர் இசை குழுவையும் உருவாக்கி வருகிறார்.
பவதாரிணி இளையராஜாவின் இசையில் உருவான 'ராசைய்யா' படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா... மஸ்தானா...' பாடல் மூலம் பாடகியாக சினிமாவுக்கு அறிமுகமானார். 'பாரதி' படத்தில் 'மயில் போல பொண்ணு ஒன்னு' என்ற பாடல் அவருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது. அமிர்தம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இளையராஜா தன் மகள் நினைவாக, அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளார். அதோடு 'பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா' ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மட்டுமே இணைந்து இதனை நடத்த உள்ளார்கள். இதற்காக தனது ஸ்டூடியோவில் ஆடிசன் நடத்தி வருகிறார்.