7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

ஒரு காலத்தில் மேடை இசை கச்சேரிகளை கடுமையாக விமர்சித்த இளையராஜா, தற்போது தனது கருத்தை மாற்றிக் கொண்டு ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். உலக நாடுகள் முதல் உள்ளூர்கள் வரை அவரது இசை நிகழ்ச்சி நடந்து வருகிறது. தனது இசை அனுபவங்களையும் வெளிப்படையாக பேசி வருகிறார்.
அடுத்து சிம்பொனிக்கான இசையை உருவாக்கி வரும் இளையராஜா அதே கையோடு மகள் பவதாரிணி பெயரில் ஒரு மகளிர் இசை குழுவையும் உருவாக்கி வருகிறார்.
பவதாரிணி இளையராஜாவின் இசையில் உருவான 'ராசைய்யா' படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா... மஸ்தானா...' பாடல் மூலம் பாடகியாக சினிமாவுக்கு அறிமுகமானார். 'பாரதி' படத்தில் 'மயில் போல பொண்ணு ஒன்னு' என்ற பாடல் அவருக்கு தேசிய விருது வாங்கி கொடுத்தது. அமிர்தம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் இசையமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இளையராஜா தன் மகள் நினைவாக, அறக்கட்டளை ஒன்றை தொடங்கி உள்ளார். அதோடு 'பவதா மகளிர் ஆர்கெஸ்ட்ரா' ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். பெண் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மட்டுமே இணைந்து இதனை நடத்த உள்ளார்கள். இதற்காக தனது ஸ்டூடியோவில் ஆடிசன் நடத்தி வருகிறார்.