அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
கடந்த சில வருடங்களாகவே தங்களது அபிமான நடிகர்கள் நடித்து வரும் படங்களுக்கு அவர்களது ரசிகர்கள் அப்டேட் கேட்டு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், இயக்குனர்களை தொந்தரவு செய்து வருவது ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது. குறிப்பாக தமிழில் அஜித் நடிக்கும் படங்களின் தகவல்கள் பெரிய அளவில் வெளியாகாமல் ரகசியமாகவே பாதுகாக்கப்படும் என்பதால், அவரது ரசிகர்கள் பிரதமர் மோடி வரை அப்டேட் கேட்டு அதை வைரல் ஆக்கினார்கள்.
இந்த நிலையில் தெலுங்கில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்திற்கு சமீபகாலமாக அப்டேட் எதுவும் வெளியாகாததால் விரைவில் அப்டேட் வெளியிடுமாறும் இல்லை என்றால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் ரசிகர் ஒருவர் எழுதியுள்ள கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் படங்கள் நீண்ட தாமதத்திற்கு பிறகு வெளியானதால் தோல்வியை தழுவின என்றும், சலார் படத்தை உரிய நேரத்தில் சீக்கிரமாக முடித்து வெளியிட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அந்த ரசிகர் கடைசி வரிகளை ரத்தத்தில் எழுதியதுபோன்று சிவப்பு நிற எழுத்துக்களால் எழுதியுள்ளார்.
இப்படிப்பட்ட ரசிர்களை என்னவென்று சொல்வது. மாய உலகமான சினிமா மோகம் இவரை எந்தளவுக்கு தள்ளி உள்ளது என பலரும் அதிர்ச்சி உடன் வேதனைப்படுகின்றனர்.