மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ருக்மிணி வசந்த். தமிழில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த 'ஏஸ்' படம் மூலம் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் வந்த சுவடு தெரியாமல் போய்விட்டது. பெரும் எதிர்பார்ப்பில் தமிழில் அறிமுகமானவருக்கு முதல் படத்தில் ஏமாற்றம்தான் கிடைத்தது.
அவரது இரண்டாவது தமிழ்ப் படமான 'மதராஸி' இந்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் படம். டிரைலரைப் பார்த்த போது ருக்மிணிக்கும் படத்தில் முக்கியத்துவம் அதிகமாகவே உள்ளது தெரிகிறது.
முதல் படத் தோல்வியை மறக்கும் விதத்தில் 'மதராஸி' வெற்றி அவருக்கு அமைந்தால் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் தேடிப் போகும். கன்னடத்தில் உருவாகி அக்டோபர் 2ல் வெளியாக உள்ள 'காந்தாரா சாப்டர் 1', தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர் நடிக்கும் 'ட்ராகன்' படத்திலும், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்திலும் ருக்மிணி வசந்த் தான் கதாநாயகி. அப்படங்களுக்குப் பிறகு அவர் பான் இந்தியா நடிகையாக மாறிவிடுவார்.