கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படம் திரைக்கு வந்தபோது படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள் இருப்பதாக சொல்லி ரசிகர்கள் அவரை சோசியல் மீடியாவில் டிரோல் செய்தனர். என்றாலும் விமர்சனங்களை கடந்து அந்த படம் வெற்றி பெற்றது . இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள ஒரு பேட்டியில், ‛‛ஒவ்வொரு படம் வெளியாவதற்கு முன்பும் ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்புகளை வெளியிட தொடங்கி விடுகிறார்கள். அவர்களுக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் எங்களால் படம் பண்ண முடியாது. அதோடு கூலி படத்தை எடுத்துக் கொண்டால் அது டைம் ட்ராவல் படமோ, எல்சியூ படமோ அல்ல. என்றாலும் ரசிகர்களாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தார்கள். அவர்கள் சொல்லும் கருத்துக்களை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது.
காரணம் ரஜினி சார் படம் என்பது மட்டுமின்றி நான் இயக்கும் படங்களையும் கருத்தில் கொண்டு அவர்கள் தங்களது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடுகிறார்கள். என்னை பொருத்தவரை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நான் படம் எடுக்க மாட்டேன். நான் எழுதக்கூடிய கதை ரசிகர்களை திருப்திப்படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன். ஒருவேளை அந்த படம் அவர்களை திருப்தி படுத்தவில்லை என்றால் அடுத்த படத்தில் அவர்களை திருப்திபடுத்த முயற்சி செய்வேன். மேலும் ஒரு படத்தின் சக்சஸ் என்பது கோடி கோடியாக வசூலிப்பதில் மட்டுமல்ல, அதை வெற்றிகரமாக எடுத்து ரசிகர்களுக்கு காட்டி விட்டால் அதுவே சக்சஸ்தான் என்கிறார் லோகேஷ் கனகராஜ்.