படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி |

பிரபல பாலிவுட் மூத்த நடிகரான தர்மேந்திரா கடந்த சில நாட்களுக்கு முன்பு வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். எண்பது தொண்ணூறுகளில் ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வந்த இவருக்கு மொழி தாண்டியும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த நிலையில் வரும் டிசம்பர் 8ஆம் தேதி தர்மேந்திராவில் பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் மும்பை லோனாவாலாவுக்கு அருகில் உள்ள கந்தலா என்கிற இடத்தில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவை கொண்ட தர்மேந்திராவின் பண்ணை வீடு ரசிகர்களின் பார்வைக்காக திறந்து விடப்பட இருக்கிறது.
இந்த தகவலை அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். டிசம்பர் 8ம் தேதி மதியம் ஒரு மணி முதல் இந்த பண்ணை வீடு ரசிகர்களுக்காக திறந்து விடப்படும். இதற்கு அனுமதி கட்டணம், முன்பதிவு என எதுவும் இல்லை. அது மட்டுமல்ல. பண்ணை வீட்டிற்கு வரும் ரசிகர்களை அழைத்து செல்வதற்காக லோனாவானாவில் இருந்து இலவச வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.