இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் கே.எஸ்.சேதுமாதவன் (90) சென்னையில் இன்று(டிச., 24) காலமானார். வயது மூப்பு காரணமாக பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவரது உயிர் பிரிந்தது.
தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த ‛நாளை நமதே', சிவகுமாரின் ‛மறுபக்கம்', கமல்ஹாசனின் ‛நம்மவர்' போன்ற படங்களை இயக்கி உள்ளார் சேதுமாதவன். ‛‛ஓடயில் நின்னு, யாக்ஷி, கடல் பாலம், ஆரா நாழிக நேரம், அச்சனும் பாப்பாயும், ஒப்போல்'' உள்ளிட்ட மலையாளத்தில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தெலுங்கு, ஹிந்தியிலும் படங்கள் இயக்கி உள்ளார். 60க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ள இவர் 4 முறை சிறந்த இயக்குனருக்கான விருது உட்பட இவரது படைப்புக்காக 10 தேசிய விருதுகளை வென்றுள்ளார். இதுதவிர பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனை மலையாள சினிமாவில் அறிமுகம் செய்ததும் இவர் தான். மலையாளத்தில் 'ஜனசுந்தரி' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், 'கன்னியாகுமரி' என்ற படத்தில் நாயகனாகவும் நடிக்க வைத்தார். சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த சேதுமாதவன், வயது மூப்பு உள்ளிட்ட உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று அவர் மறைந்தார்.
சேதுமாதவன் மறைவுக்கு கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கமல் வெளியிட்ட இரங்கல் செய்தி : ‛‛காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம். மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூறப்படுவார். என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள்'' என தெரிவித்துள்ளார்.