காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு | வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் |

ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛அயலான்'. ஏலியன் தொடர்பான கதையில் உருவாகி வரும் இதன் படப்பிடிப்பு தடைபட்டு தடைபட்டு ஒருவழியாக முடிந்துவிட்டது. தற்போது மற்ற பணிகள் நடந்து வருகின்றன. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தை 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் ஜேக் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அயலான் படத்தை வெளியிட தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், 24 ஏ.எம். நிறுவனம், தங்களிடம் பெற்ற 5 கோடி கடன் தொகையை, வட்டியுடன் சேர்த்து ரூ. 6 கோடியே 92 லட்சம் ரூபாய் திருப்பி தர வேண்டி உள்ளது. அந்த பணத்தை தராமல் அயலான் படத்தை வெளியிடவோ, விநியோகம் செய்யவோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று(டிச., 23) விசாரணைக்கு வந்தபோது, ‛அயலான்' படத்தை ஜன., 3 வரை வெளியிட இடைக்கால தடை விதித்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜன.3க்கு தள்ளி வைத்து ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.




