கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
இன்றைய தேதியில் மலையாளத்தில் அதிக படங்களில் நடிக்கும் இரண்டு நடிகர்களில் ஒருவர் பிரித்விராஜ். இன்னொருவர் டொவினோ தாமஸ். இதில் பிரித்விராஜ் ஆடுஜீவிதம், கடுவா, ஜனகனமன, கோல்டு கேஸ், குருதி என கைநிறைய படங்களை வைத்திருக்கும் நிலையில் தற்போது தீர்ப்பு என்கிற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகியாக இஷா தல்வார் நடிக்கிறார். ரணம் படத்தி தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இந்தப்படத்தில் ஜோடி சேர்கின்றனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் துவங்குகிறது. திலீப்-சித்தார்த் நடித்த கம்மார சம்பவம் படத்தை இயக்கிய ரதீஷ் அம்பாட் இந்தப்படத்தை இயக்குகிறார். அந்தப்படத்திற்கு கதை எழுதிய நடிகர் முரளி கோபி தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார்.. அதுமட்டுமல்ல, பிரித்விராஜ், முதன்முறையாக இயக்குனராக மாறி, மோகன்லாலை வைத்து இயக்கிய 'லூசிபர்' என்கிற சூப்பர் ஹிட் படத்தின் கதையை எழுதியவரும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது..