ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. அப்படத்தில் கீரவாணி இசையில், ராகுல் சிப்லிகுன்ச் பாடிய 'நாட்டு நாட்டு' பாடல் அந்த ஆண்டிற்கான சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது பெற்றது.
தெலுங்கு சினிமா பாடல் ஒன்று ஆஸ்கர் விருது பெற்றதை அத்திரையுலகினர் கொண்டாடினார். ஆனால், அப்போது இருந்த அரசு அந்த விருதைப் பெற்றவர்களை கவுரவிக்கவில்லை. அந்த சமயத்தில் எதிர்க்கட்சியாக இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்தார். அதோடு காங்கிரஸ் பதவிக்கு வந்தால் அவருக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும என்று அறிவித்தார்.
இருந்தாலும் அது பற்றி எந்த அறிவிப்பும் வராமல் இருந்தது. இதனிடையே, சமீபத்தில் தெலுங்கு சினிமாவுக்கான 'கட்டார் விருதுகள்' வழங்கும் விழாவில் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு துணை முதல்வரை கேட்டுக் கொண்டார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போனலு திருவிழா நிகழ்வில் ஆந்திர முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாடகர் ராகுலுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். நிறைய இளைஞர்களுக்கு அவர் முன்னுதாரணமாக இருக்கிறார் என்றும் பாராட்டியுள்ளார்.