அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் | ‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் |
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்து வெளிவந்த தெலுங்குப் படம் 'ஆர்ஆர்ஆர்'. அப்படத்தில் கீரவாணி இசையில், ராகுல் சிப்லிகுன்ச் பாடிய 'நாட்டு நாட்டு' பாடல் அந்த ஆண்டிற்கான சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது பெற்றது.
தெலுங்கு சினிமா பாடல் ஒன்று ஆஸ்கர் விருது பெற்றதை அத்திரையுலகினர் கொண்டாடினார். ஆனால், அப்போது இருந்த அரசு அந்த விருதைப் பெற்றவர்களை கவுரவிக்கவில்லை. அந்த சமயத்தில் எதிர்க்கட்சியாக இருந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்தார். அதோடு காங்கிரஸ் பதவிக்கு வந்தால் அவருக்கு ரூ.1 கோடி பரிசாக வழங்கப்படும என்று அறிவித்தார்.
இருந்தாலும் அது பற்றி எந்த அறிவிப்பும் வராமல் இருந்தது. இதனிடையே, சமீபத்தில் தெலுங்கு சினிமாவுக்கான 'கட்டார் விருதுகள்' வழங்கும் விழாவில் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு துணை முதல்வரை கேட்டுக் கொண்டார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போனலு திருவிழா நிகழ்வில் ஆந்திர முதல்வர் ரேவந்த் ரெட்டி, பாடகர் ராகுலுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். நிறைய இளைஞர்களுக்கு அவர் முன்னுதாரணமாக இருக்கிறார் என்றும் பாராட்டியுள்ளார்.