Advertisement

சிறப்புச்செய்திகள்

அரசியலில் நான் 'பேமஸ்'; சினிமாவில் நான் 'ஆவரேஜ்': பவன் கல்யாண் ஓபன் டாக் | ஸ்கூல் ரியூனியன் : 50 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நாசர் | ‛கலைத்தாயின் தவப்புதல்வன்' : இன்று நடிகர் சிவாஜியின் நினைவுத்தினம் | ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் விஜய்சேதுபதி, வடிவேலு, ஏ.எம்.ரத்னம் | பிளாஷ்பேக்: “காவல் தெய்வம்” ஆன ஜெயகாந்தனின் “கை விலங்கு” | நாயகியை 'டிரோல்' செய்ய வைத்தாரா நடிகரின் மேனேஜர்? | தள்ளிப் போகிறதா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | காந்தாரா 2 படப்பிடிப்பு நிறைவு : மேக்கிங் வீடியோ வெளியிட்டு ரிஷப் ஷெட்டி அசத்தல் | என்னங்க பண்ணுறது, அப்படிதான் வருது : ‛எட்டுத் தோட்டாக்கள்' வெற்றி | வருத்தத்தில் கயாடு லோஹர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜி.வி.பிரகாஷ் விட்டுக்கொடுத்த பல கோடி சம்பளம்

21 ஜூலை, 2025 - 10:58 IST
எழுத்தின் அளவு:
G.V.-Prakash-gave-up-his-salary-of-several-crores

சென்னையில் நடந்த ‛பிளாக் மெயில்' பட விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் அமல்ராஜ், ''ஹீரோ ஜி.வி.பிரகாஷிற்கு மிக்க நன்றி. இந்த படம் ஒரு கட்டத்தில் நகராமல் இருந்தது. இன்னும் பல நாட்கள் படப்பிடிப்பு நடத்தினால் மட்டுமே படத்தை முடிக்க முடியும் என்ற நிலை. நான் ஹீரோவிடம் பேசினேன், என் நிலைமையை சொன்னேன். அவர் பாதி சம்பளம் மட்டுமே வாங்கிய நிலையில், மறுப்பு எதுவும் சொல்லாமல் மீண்டும் படத்தில் நடிக்க வந்தார். மீதி சம்பளத்தை விரைவில் கொடுத்து விடுவேன்' என்று வெளிப்படையாக பேசினார்.

அடுத்து பேசிய இயக்குனர் வசந்தபாலன், 'நான்தான் வெயில் படத்தின் மூலம் அவரை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தேன். அன்று முதல் இன்று வரை அப்படியே இருக்கிறார். நான் இயக்கிய 2 படத்துக்கு கூட அவர் சம்பளம் வாங்கவில்லை. பட நிலைமையை சொன்னபோது, மானேஜரிடம் பேசுகிறேன், டைம் கொடுங்கள் என்று கூட சொல்லவில்லை. டக்கென சம்பளத்தை விட்டுக் கொடுக்க முடிவெடுத்தார்'' என்றார்.

இந்த பேச்சை கேட்டவர்கள், இதே பாலிசியை மற்ற தயாரிப்பாளர்களுக்கும் கடைபிடித்தால், ஜி.வி.பிரகாஷ் ஒவ்வொரு ஆண்டும் பலகோடி சம்பளத்தை இழக்க நேரிடும் என்று கமென்ட் அடித்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு படவிழாவில் பேசிய தயாரிப்பாளர் தேனப்பன். 'சமீபத்தில் வெளியான ஒரு பெரிய பட்ஜெட் படம் பைனான்ஸ் பிரச்னையில் தவித்தபோது, என்னால் அந்த படம் நிற்க வேண்டாம் என சொல்லி, தனது பெரிய சம்பவளத்தை ஜி.வி.பிரகாஷ் விட்டுக்கொடுத்தார்' என பேசியிருந்தார்.

சம்பள விஷயத்தில் அவர் மாமா, ஏ.ஆர்.ரஹ்மான் கறார். ஆனால், நண்பர்கள், நல்ல படம், தயாரிப்பாளர்களின் நிலை, இயக்குனரின் எதிர்காலம், படம் ரிலீஸ் ஆக வேண்டிய நிலை போன்ற காரணங்களாக, தனது சம்பளத்தை தயங்காமல் விட்டுக் கொடுக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் தயாரிப்பாளர் என்பதால் இந்த முடிவுகளை யோசிக்காமல் எடுப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'நாட்டு நாட்டு' பாடகர் ராகுலுக்கு ரூ.1 கோடி பரிசு'நாட்டு நாட்டு' பாடகர் ராகுலுக்கு ... வருத்தத்தில் கயாடு லோஹர் வருத்தத்தில் கயாடு லோஹர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in