எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் 'பிளாக்மெயில்'. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் தேஜூ அஸ்வினி. ஆகஸ்ட் முதல் தேதியில் படம் வெளிவருகிறது. படத்தில் நடித்திருப்பது பற்றி தேஜூ அஸ்வினி கூறியிருப்பதாவது: 'படாக் படாக்' பாடலில் ஜிவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து நடனமாடினேன். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. நாங்கள் இருவரும் வைரல் ஜோடியானோம். எங்கள் ஜோடி பொருத்தம் குறித்து பலரும் பாராட்டினார்கள். அதுவே நான் இந்த படத்தில் இணைய காரணமானது. ஏற்கெனவே இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், இந்த படம் எனக்கு தனி அடையாளத்தை கொடுக்கும் என்று நம்புகிறேன்.
வழக்கமான நடிப்பைத் தாண்டி பல பரிசோதனை முயற்சிகளை செய்து பார்க்க 'பிளாக்மெயில்' இடம் கொடுத்தது. புதுவிதமான அனுபவமாக இது அமைந்தது. இயக்குநர் மு. மாறனின் முந்தைய படங்களான 'கண்ணை நம்பாதே', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் கதாநாயகிகளுக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கும். 'பிளாக்மெயில்' படத்தில் என்னை கதாநாயகியாக கேட்டபோதும் நிச்சயம் நடிப்பை வெளிக்கொண்டு வரும் கதாபாத்திரமாக அமையும் என்ற நம்பிக்கையில் சம்மதித்தேன். ஜிவி பிரகாஷ் உடன் இதற்கு முன்பு கலர்புல்லான மியூசிக் வீடியோவில் பணிபுரிந்திருந்ததால் இந்த வாய்ப்பு அவர் மூலம் எனக்கு அமைந்தது'' என்றார்.