‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வரும் ஸ்ரீ லீலா, தற்போது தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‛பராசக்தி' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் ‛ஆஷிகி -3' என்ற படத்தில் கார்த்திக் ஆரியனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.
இந்தநிலையில் தற்போது பாலிவுட் ஊடகங்களில் கார்த்திக் ஆரியனும், ஸ்ரீலீலாவும் காதலிப்பதாக ஒரு செய்தி வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து உடனடியாக அதற்கு ஒரு மறுப்பு தெரிவித்திருக்கிறார் ஸ்ரீ லீலா. அவர் கூறுகையில், ‛‛என்னை பற்றி வெளியாகும் காதல் செய்தி முற்றிலும் வதந்தியாகும். சினிமாவை மட்டுமே நான் காதலித்து வருகிறேன். அதோடு நான் படப்பிடிப்புக்கு செல்லும் ஒவ்வொரு நாளும் என்னுடைய தாயார் என்னுடன்தான் இருப்பார். அப்படி இருக்கும்போது நான் எப்படி காதலிக்க முடியும். அதனால் இதுபோன்ற செய்தியை யாரும் நம்பவேண்டாம். மேலும் சினிமாவில் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு மேல் நடிக்க ஆசைப்படுகிறேன். அதனால் இது போன்று வதந்திகளை பரப்பி என் மார்க்கெட்டை சரித்து விடாதீர்கள்'' என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் ஸ்ரீ லீலா.