'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

தெலுங்கில் முன்னணி ஹீரோயின்களாக இருக்கும் ஸ்ரீலீலாவும், பாக்யஸ்ரீயும் தமிழுக்கு வருகிறார்கள். சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா நடிக்கும் 'பராசக்தி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார் ஸ்ரீலீலா. பொங்கலுக்கு படம் ரிலீஸ். துல்கர் சல்மான் நடிக்கும் 'காந்தா' படத்தின் மூலம் தமிழில் அடியெடுத்து வைக்கிறார் பாக்யஸ்ரீ.
தமிழில் கொடிகட்டி பறந்த நயன்தாரா, திரிஷா, சமந்தா போன்றவர்களுக்கு வயதாகிவிட்டது. ராஷ்மிகா மந்தனா அடுத்த ஆண்டு திருமணம் செய்யப்போகிறார். சில மலையாள ஹீரோயின்கள் மட்டுமே தமிழில் அதிக படங்களில் நடிக்கிறார். ஆகவே, அந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஸ்ரீலீலாவும், பாக்யஸ்ரீயும் ஆசைப்படுகிறார்களாம்.
பராசக்தி படம், 1960, 70 கால கட்டத்தில் நடக்கிறது. அதனால் ஸ்ரீலீலாவுக்கு மார்டனாக, கவர்ச்சியாக நடிக்க வாய்ப்பில்லை. பாக்யஸ்ரீ நடிக்கும் காந்தா படம், 1950களில் நடக்கிறது. ஆகவே, இருவரும் அடுத்து அதிரடி கவர்ச்சி படங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறார்களாம். காந்தா படத்துக்காக தமிழ் கற்று இருக்கிறார் பாக்யஸ்ரீ, பராசக்தி படப்பிடிப்பில் ஸ்ரீலீலாவும் தமிழ் படித்து வருகிறாராம்.