பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

ராம் கோபால் வர்மா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், நாகார்ஜுனா, அமலா, ரகுவரன் மற்றும் பலர் நடிப்பில் 1989ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படம் 'சிவா'. தெலுங்குத் திரையுலகத்தின் 'டிரென்ட் செட்டர்' ஆக அமைந்த இந்தப் படம் நாளை மறுதினம் டிஜிட்டல் தரத்தில் ரிரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சிறப்புக் காட்சியை முடித்த பிறகு இயக்குனர் ராம்கோபால் வர்மா, நாகார்ஜுனா பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ராம் கோபால் வர்மா, “1972ல் வெளியான ‛தி வே ஆப் டிராகன்'(ரிட்டர்ன் ஆப் தி டிராகன்) படத்தில், ப்ரூஸ் லீ ரோம் நகருக்குப் போகிறார். அங்கு ரெஸ்டாரன்ட்டில் தொந்தரவு செய்யும் ரவுடிகளுடன் சண்டையிடுகிறார். நான் ரெஸ்டாரன்ட் என்பதை கல்லூரி என்று மாற்றினேன், அதோடு என் சொந்த அனுபவங்களை சேர்த்தேன். இது, நான் எழுதியதில் வேகமான ஒரு வரிக் கதையாக இருக்கலாம்” என்று ராம் கோபல் வர்மா கூறினார்.
ஏதோ ஒரு படத்தின் ஏதோ ஒரு காட்சியிலிருந்து அல்லது கதாபாத்திரத்திலிருந்து 'இன்ஸ்பயர்' ஆகித்தான் பல படங்களின் ஒரு வரிக் கதைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அதை திரைக்கதையாக எப்படிச் சொல்கிறோம் என்பதில்தான் படத்தின் வெற்றி அமைகிறது. அந்த விதத்தில் 'சிவா' படத்தின் வெற்றி அமைந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கொண்டாடப்படுகிறது.