ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

ராம் கோபால் வர்மா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், நாகார்ஜுனா, அமலா, ரகுவரன் மற்றும் பலர் நடிப்பில் 1989ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படம் 'சிவா'. தெலுங்குத் திரையுலகத்தின் 'டிரென்ட் செட்டர்' ஆக அமைந்த இந்தப் படம் நாளை மறுதினம் டிஜிட்டல் தரத்தில் ரிரிலீஸ் ஆக உள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சிறப்புக் காட்சியை முடித்த பிறகு இயக்குனர் ராம்கோபால் வர்மா, நாகார்ஜுனா பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ராம் கோபால் வர்மா, “1972ல் வெளியான ‛தி வே ஆப் டிராகன்'(ரிட்டர்ன் ஆப் தி டிராகன்) படத்தில், ப்ரூஸ் லீ ரோம் நகருக்குப் போகிறார். அங்கு ரெஸ்டாரன்ட்டில் தொந்தரவு செய்யும் ரவுடிகளுடன் சண்டையிடுகிறார். நான் ரெஸ்டாரன்ட் என்பதை கல்லூரி என்று மாற்றினேன், அதோடு என் சொந்த அனுபவங்களை சேர்த்தேன். இது, நான் எழுதியதில் வேகமான ஒரு வரிக் கதையாக இருக்கலாம்” என்று ராம் கோபல் வர்மா கூறினார்.
ஏதோ ஒரு படத்தின் ஏதோ ஒரு காட்சியிலிருந்து அல்லது கதாபாத்திரத்திலிருந்து 'இன்ஸ்பயர்' ஆகித்தான் பல படங்களின் ஒரு வரிக் கதைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், அதை திரைக்கதையாக எப்படிச் சொல்கிறோம் என்பதில்தான் படத்தின் வெற்றி அமைகிறது. அந்த விதத்தில் 'சிவா' படத்தின் வெற்றி அமைந்தது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும் கொண்டாடப்படுகிறது.