மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
நடிகர் பிரித்விராஜ் இரண்டு ஆண்டுகளாகவே ஒரு பக்கம் மோகன்லாலின் ‛எல் 2 : எம்புரான்' படத்தை இயக்குவதிலும், இன்னொரு பக்கம் தெலுங்கில் ‛சலார்', ஹிந்தியில் ‛படே மியான் சோட்டே மியான்' ஆகிய படங்களில் வில்லனாகவும், மாறி மாறி பணியாற்றி வந்தார். அதுமட்டுமல்ல ‛சர்ஜமீன்' என்கிற ஹிந்தி வெப்சீரிசிலும் நடித்துள்ளார். ஜூலை 25 முதல் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. அடுத்ததாக தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் தற்போது வில்லனாக நடித்தும் வருகிறார் பிரித்விராஜ்.
இன்னொரு பக்கம் மலையாளத்தில் உருவாக இருக்கும் கலிபா என்கிற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் பிரித்விராஜ். இந்த படத்தை புலி முருகன் இயக்குனர் வைசாக் இயக்குகிறார். கடந்த 2010ல் வெளியான போக்கிரி ராஜா என்கிற படத்தில் பிரித்விராஜை இயக்கியதன் மூலம் தான் முதன்முறையாக இயக்குனராக அறிமுகமானார் வைசாக். அதைத்தொடர்ந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்குகிறார். படத்தின் துவக்க விழா பூஜை தற்போது நடைபெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் லண்டனில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.