நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகிய இருவரும் சேர்ந்து தொழிலதிபர் ஒருவரிடம் 60 கோடி மோசடி செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்து அதுகுறித்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு தனது வழக்கறிஞர் மூலம் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார் ஷில்பா ஷெட்டி. ஆனால் அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அந்த 60 கோடியை டெபாசிட் செய்தால் அனுமதி தர பரிசீலிப்பதாக தெரிவித்தது.
இதற்கிடையே ஷில்பாவும் அவரது கணவரும் வெளிநாடு செல்ல அனுமதி கேட்ட மனுவை வாபஸ் பெற விரும்புவதாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதை நீதிமன்றமும் ஏற்றது. எதிர்காலத்தில் வெளிநாடு செல்ல வேண்டியிருந்தால் மனு செய்வதாக இருவரும் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற கெடுபிடியால் ஷில்பாவும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவும் வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துள்ளனர்.