நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா இரண்டு மாதங்களுக்கு முன்பு 'ஆபாசப்பட விவகாரம்' தொடர்பாக கைது செய்யப்பட்டார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று தான் அவருக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்தது. 50000 ரூபாய் ஜாமீன் தொகை மற்றும் சில கட்டுப்பாடுகளுடன் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
பல பெண்களை வைத்து ஆபாசப் படங்களை எடுத்து அவற்றைப் பார்ப்பதற்கென்று தனியாக மொபைல் ஆப் நடத்தியதாக ராஜ் குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்தனர். கடந்த வாரம் நீதிமன்றத்தில் அவர் மீது 1400 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர் போலீசார். இந்த வழக்கில் அவர்தான் முக்கியக் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள்.
இந்த வழக்கில் தன்னை பலியாடு ஆக்கிவிட்டதாக ராஜகுந்த்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். ராஜ்குந்த்ராவுக்கு ஜாமீன் கிடைத்த பிறகு ஷில்பா ஷெட்டி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், சீன-அமெரிக்க மாடர்ன் ஆர்க்கிடெக்ட் ரோஜர் லீ சொன்னதாக, “மோசமான புயலுக்குப் பிறகு அழகான விஷயங்கள் நடக்கலாம் என்பதை நிரூபிக்க வானவில் உள்ளது,” என்ற கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
ராஜ்குந்த்ராவை ஷில்பா ஷெட்டி விவகாரத்து செய்யலாம் எனத் தகவல் வெளியான நிலையில் ஷில்பாவின் இந்தப் பதிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ராஜ் குந்த்ரா சில மணி நேரங்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியில் வந்தார் என மும்பை தகவல்கள் தெரிவிக்கின்றன.